வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இதை எல்லாம் செய்யாதீங்க! அதிர்ஷ்டம் விலகும்!

 
இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!!

எதைச் செய்தாலும், வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீங்க. வெள்ளிக்கிழமைகளுக்கு என தனியே ஒரு வைப்ரேஷன் உண்டு. மதங்களைக் கடந்து எல்லா மதத்தினருமே வெள்ளிக்கிழமைகளைக் கொண்டாடுவது அதனால் தான். புனித வெள்ளி என கிறிஸ்தவர்கள் விரதமிருக்கிறார்கள். தினந்தோறும் ஐந்து முறை தொழுகையை கடைப்பிடிக்காத இஸ்லாமிய சகோதரர்கள் கூட, வெள்ளிக்கிழமைகளில் தொழுகை செய்வதை வாழ்நாளில் மறப்பதோ, தவறுவதோ கிடையாது. அதனால் வெள்ளிக்கிழமைகளில் நேரெதிரான காரியங்களை மறந்தும் செய்யாதீங்க... அதனால் நம்மை விட்டு அதிர்ஷ்டமும், செல்வமும் விலகி போக ஆரம்பித்து விடும். 

வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம். அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க… அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. கூடுமானவரை வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். நம்மில் நிறைய பேர் வெள்ளிக்கிழமைகளில் தான் அவசரம் என்று தலையை சொரிந்து கொண்டு, நம்மிடம் கடன் கேட்டு வந்து நிற்பதை கவனித்திருக்கலாம். அது 10 ரூபாயோ, 100 ரூபாயோ வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
அதே போல் வெள்ளிக்கிழமைகளில் அரிசியை வறுப்பதும், புடைப்பதும் கூடாது. குறிப்பாக பச்சரிசியை வெள்ளிக்கிழமைகளில் அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். பச்சரிசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
அப்புறம் எல்லா கிழமைகளிலுமே பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.

மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விளக்கு வைத்த பிறகு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, தலை வாருதல், பேன் பார்த்தல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. பெரும்பாலும், பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து விட்டு, தலை காய வைக்கிறோம் என்று தலைவிரி கோலத்துடன் இருப்பார்கள். அதற்கென நேரம் ஒதுக்கி, தலையைக் காய வைத்து விட்டு, பின்னர் வேறு வேலையில் ஈடுபடுங்கள். தலை முடியை வெள்ளிக்கிழமைகளில், தலைவிரி கோலமாய் இருத்தல் கூடாது.
விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக் கூடாது.
காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக் கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது.
பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. இதை எல்லா நாளிலுமே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யவே செய்யாதீங்க.
துண்டைக் கட்டிக் கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது.
தேங்காயை, பூஜைக்கு படைக்கும் போது, உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்கக் கூடாது.
இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web