இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து!
சென்னையில் இன்று காலை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி காரணமாக குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இன்று முதல் 3 நாட்களுக்கு ஆகஸ்ட் 1 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.சென்னையில் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை நகரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி நடைபெறவுள்ளது. புதிதாக அமைத்த 2வது வரிசை குடிநீர் குழாயை பயன்பாட்டில் உள்ள குழாயுடன் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது.

பாடி முகப்பேர், கொரட்டூர், புழல், சூரப்பட்டு, திருமங்கலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஷெனாய் நகர், சாந்தி காலனி, வள்ளுவர் கோட்டம், எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், நந்தனம், ஆர்.ஏ.புரம், ஆழ்வாட்பேட்டை, ஐஸ்ஹவுஸ், மேற்கு மாம்பலம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், நெளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், காரம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர், தில்லை நகர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, வேளச்சேரி, அடையாறு, தரமணி, திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
