போதையில் மாணவர்கள்... கண்டித்ததால் பள்ளியிலேயே ஆசிரியர் மண்டை உடைப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மது போதையில் மாணவர்கள் இருப்பதை அறிந்து, ஆசிரியர் சண்முக பாண்டியன் இதனைக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ஆசிரியரை பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்து விட்டனர். மாணவர்களால் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் ஆசிரியர் சண்முக பாண்டியன் மண்டை உடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 4 மாணவர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வியாளர்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
