தலைநகர் டெல்லி, ஹரியானாவில் நிலநடுக்கம்!
இன்று காலை தலைநகர் தில்லியில் ஜூலை 10ம் தேதி வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.04 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.

தில்லி, காசியாபாத், குருகிராம், நொய்டா உட்பட சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுவரை சேதங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
