நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஆராய்ச்சியாளர்கள் உட்பட 8 பேர் பலி!
அர்ஜென்டினா கடலில் ஆராய்ச்சிக்காக அரியவகை மீனை தேடி சென்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர்.அட்லாண்டிக் கடலில் ‘டூத்பிஷ்’ என்னும் அரியவகை மீன் ஒன்று காணப்படுகிறது. இயற்கையாகவே இந்த மீனுக்கு பாதரசம் என்னும் வேதிப்பொருளை உட்கொள்ளும் தன்மை உள்ளது. இதனால் இந்த மீனில் உள்ள பாதரசத்தின் உள்ளடகத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கடலின் மாசுபாடை கண்டறிந்து வருகின்றனர்.

இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மீனை தேடி அட்லாண்டிக் கடலுக்கு படையெடுக்கின்றனர். அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் உள்ள தீவு நாடாக பால்க்லாந்து விளங்குகிறது. தீவுக்கூட்டத்தை இங்கிலாந்து நிர்வகித்து வரும்நிலையில் பால்க்லாந்து தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என அர்ஜென்டினா கூறி வருகிறது.
இந்நிலையில் ரஷியா, இந்தோனேசியா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மீனை ஆய்வு செய்வதற்காக பால்க்லாந்து வந்தனர். அங்கிருந்து உள்ளூர் மீனவர்கள், ஆராய்ச்சி குழுவினர் உள்பட 27 பேர் குறிப்பிட்ட அந்த மீனை பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வானிலை மாற்றம் காரணமாக கடும் புயல் வீசியது. இதில் அந்த மீன்பிடி படகு முற்றிலுமாக சேதமடைந்து நடுக்கடலில் கவிழ தொடங்கியது.இதனையடுத்து அதில் இருந்த அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக கடலில் குதித்தனர்.
இதில் நீரில் மூழ்கி ரஷியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த வழியாக வந்த கப்பலில் வந்த மாலுமிகள் கடலில் தத்தளித்து தவித்த 14 பேரை உயிருடன் மீட்டனர். இந்தநிலையில் கடலில் மூழ்கி காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
