பயங்கரம்!! ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பாய்ந்த மின்சாரம்!! 6 பேர் பரிதாப பலி!!

 
train

மின்சார ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார கம்பிகளில் ஹைவோல்ட்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும். இதில் தெரியாமல் பட்டாலே ஆளை தூக்கிவிடும் இதே போல் ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநில ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் நிசித்பூர் என்ற ஊரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும்போது தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

train

அப்போது தண்டவாளத்தில் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.உயிரிழந்த அனைவரும் தன்பாத் மற்றும் கோமோ ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஃபிக்ஸட்பூர் ரயில் கேட் அருகே மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்கம்பத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 25000வோல்ட் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

tra
இந்நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து அந்த வழியாக செல்ல இருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web