கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர் காமராசர்... இபிஎஸ் மரியாதை..!

 
இபிஎஸ்
 


 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .  இது குறித்து கர்ம வீரர், பெருந்தலைவர், கல்வி கண் திறந்தவர் என போற்றப்படும்  முன்னாள் முதல்வர்  காமராசரின்  பிறந்தநாள், இன்று  ஜூலை 15ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 

காமராசர்

இதனையொட்டி தலைவர்கள் பலரும் காமராசரின் சாதனைகளை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்த வகையில் காமராசர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். 

காலம் போற்றும் கர்மவீரர் ! சாதனைத் தமிழர் காமராஜர்!

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர்!! நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?