அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய என்னைத் தவிர யாருமில்ல... எடப்பாடி விளாசல்!
![இபிஎஸ்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/64383ff5198a2ef68fc0a092096b40bd.png)
மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு 8 முறை வந்து பிரச்சாரம் செய்தார். அதே போல் மத்திய அமைச்சர்களும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தனர். ஆனால் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக நான் ஒருவன் மட்டுமே தனியாக நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் தான் அதிமுக தோல்வி அடைந்தது.
கூட்டணியில் இருக்கும் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உட்பட தலைவர்கள் மற்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தனர். பாராளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒன்றல்ல வேறு, வேறு . அதிமுக 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி நிச்சயம் கிடையாது. இனி வரும் 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!