ஈரோடு இடைத்தேர்தல் ... இன்று வெளியாகப் போகும் அறிவிப்பு!

 
தேர்தல் ஆணையம்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த  அறிவிப்பு இன்று வெளியாகலாம் என  தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் திடீரென 2023ல் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

இந்த இடைத்தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவவன் உடல்நலக்குறைவு காரணமாக  டிசம்பர் 14ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்


இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில், அதனுடன்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web