பிப்.5ல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல்... முழு விபரம்!

 
காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 17ம் தேதி தொடங்குகிறது.

தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் காலமானார். அதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

முன்னதாக 2021ல் இத்தொகுதி எம் எல் ஏவாக தேர்வான திருமகன் ஈவெரா 2023ம் ஆண்டு காலமானதால், அவரின் தந்தை இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இந்த சூழலில் இப்போது மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியே மீண்டும் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web