பெட்ரோல் பங்க்கில் பயங்கர வெடி விபத்து... 20 பேர் படுகாயம் !

 
வெடி விபத்து

இத்தாலி தலைநகர் ரோமில் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டு இருப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். 


எரிவாயு கசிவை நிறுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திடீரென பெட்ரோல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் போலீசார், தீயணைப்புப்படையினர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். 

வெடி விபத்து

இதையடுத்து, படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?