ஆறு உசுரைக் காவு வாங்கிய வெடிவிபத்து... 4 பேர் மீது வழக்குப்பதிவு... உரிமையாளர் கைது!
நேற்று விருதுநகர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கோட்டூர் பகுதியில், அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆலையின் 4 அறைகள் சுக்குநூறாக உடைந்து தரைமட்டமானது. அந்த அறைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் சசி பாலனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!