அடுத்தடுத்து சோகம்...சென்னையில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து!

 
ஜன்சதாப்தி

கடந்த வாரத்தில்  ஒடிசாவில் நடந்த  3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் கோரவிபத்து ஏற்பட்டது. இதில் 275க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இந்த ரயில் விபத்துக்கு பிறகு  இந்தியா முழுவதும் பல இடங்களில் ரயிலை கவிழ்க்க சதி, தண்டவாளத்தில் விரிசல்,   சரக்கு ரயில் தடம் புரண்டது என அடுத்தடுத்து விபத்துக்கள்  ஏற்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தடம் புரண்ட ரயில்

அந்த வரிசையில் சென்னையில் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில்பயணிகள் யாரும் இல்லை. செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்ட ரயில் தடம் புரண்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  விஜயவாடாவில் இருந்து நேற்று மதியம் 3:20 மணியளவில் புறப்பட்ட ஜனசதாப்தி ரயில் நேற்று இரவு 10:40 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த நிலையில் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ரயில்

பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகியதாக தகவல் வெளியானது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் 2 மணி நேரம் போராடி ரயில் சக்கரங்களை சரியான முறையில் சீரமைத்தனர்.   தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் சரி செய்த பிறகு போக்குவரத்து சீரானது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web