குட்நியூஸ்... நெல்லை உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம், பயண நேரம் குறைப்பு...!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..


தமிழகத்தில்  பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் மற்றும்  நேரம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2025ல்  புத்தாண்டு முதல்  இந்தியன் ரயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி நேற்று புதன்கிழமை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்களில் பயண நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி  
திருநெல்வேலி சென்னை இடையே இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632) நெல்லையிலிருந்து  இரவு 8.10 மணிக்கு பதில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதே வேளையில் சென்னைக்கு வழக்கமான நேரத்தில் காலை 7 மணி சென்றடையும். பயண நேரம் 20 நிமிடம் குறைந்துள்ளது. அதே போல்  மறுமார்க்கமாக இதே ரயில் (வ.எண்:12631) இரவு 8.10 மணிக்கு பதில் இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து   புறப்பட்டு வழக்கமான நேரத்தில் (காலை 6.40 மணி) நெல்லை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12661) சென்னையில் இருந்து இரவு 8.40 மணிக்கு பதிலாக இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு காலை 7.25 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம்-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு பதிலாக 9 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக இதே ரயில் செங்கோட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்கு பதிலாக 5.10 மணிக்கு புறப்படும்.

ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடி


அதே நேரத்தில் கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.50 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். தூத்துக்குடி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு பதிலாக 11 மணிக்கு புறப்படும். வாரம் இரண்டு முறை இயக்கப்படும் மதுரை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வழி: திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை) மதுரையில் இருந்து இரவு 8.50க்கு பதிலாக 8.45க்கு புறப்படும். மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்:16729) மதுரையில் இருந்து இரவு 11.25க்கு பதிலாக இரவு 11.20க்கு புறப்படும்.  திருச்செந்தூர்-நெல்லை ரயில் (வ.எண்: 56728) காலை 7.20க்கு பதிலாக காலை 7.10 மணிக்கும், வாஞ்சி மணியாச்சி-திருச்செந்தூர் ரயில் (வ.எண்:56731) மணியாச்சியில் இருந்து காலை 11.05க்கு பதிலாக காலை 11 மணிக்கும், நெல்லை-செங்கோட்டை ரயில் (வ.எண்:56741) காலை 7 மணிக்கு பதிலாக காலை 6.50க்கும், நெல்லை-செங்கோட்டை ரயில் (வ.எண்: 56743) பிற்பகல் 1.50 மணிக்கு பிற்பகல் 1.45க்கும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரயில்
நெல்லை-நாகர்கோவில் ரயில் (வ.எண்:56708) காலை 7.10 மணிக்கு பதிலாக காலை 7.05க்கும், நெல்லை-திருச்செந்தூர் ரயில் (வ.எண்: 56727) காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.15க்கும், காரைக்குடி - திருச்சி ரயில் (வ.எண்: 56816) மாலை 3.30 மணிக்கு பதிலாக மாலை 3.15 மணிக்கு புறப்படும். மேலும் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட 57 ரயில்களின் பயண நேரமும் குறைக்கப்பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web