விமான நிலையத்தில் பரபரப்பு... நடிகை, பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட சிஐஎஸ்எஃப் வீரர்!

 
கங்கனா ரனாவத்

சண்டிகர் விமான நிலையத்தில்  பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் கண்ணத்தில் மத்திய பாதுகாப்புப் படை பெண் அதிகாரி  அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இன்று சண்டிகர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு இருந்த துணை ராணுவப் படையான மத்திய தொழில் பாதுகாப்பு (சிஐஎஸ்எஃப்) பெண் வீரருக்கும், நடிகை கங்கனாவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.


வாக்குவாதம் முற்றி நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் வீரர் அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாபில் உள்ள சண்டிகர் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் நம்பகமான வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘நாட்டின் மிக சக்தி வாய்ந்த பெண் நான்’: கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கங்கனா ரணாவத் தரப்பு விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web