பகீர்... வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் மனைவியை மிரட்ட மகளின் கையை பிளேடால் அறுத்த கணவன்!

 
பாலசுப்ரமணியன்

வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் மனைவியை, சொந்த ஊருக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தியும் லீவு கிடைக்கவில்லை என்று மறுத்ததால், மனைவியை மிரட்டுவதற்காக மகளின் கையை பிளேடால் அறுத்து, அதை வீடியோ காலில் காட்டச் சொல்லி துன்புறுத்தி அதிர வைத்திருக்கிறான் கணவன். இந்த வீடியோ வெளியாகி, கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழதோட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (30). இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் தன்ஷிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக சிவரஞ்சனி சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வர மிரட்டுவதற்காக, தனது மகள் தன்ஷிகாஸ்ரீயின் கையை பாலசுப்ரமணியன் பிளேடால் வெட்டினார். ரத்தம் வெளியேறுவதை வீடியோவில் காட்டுமாறு கூறி குழந்தையை சித்ரவதை செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியனின் தாயார் அவரை தடுத்து நிறுத்தினார். அவரையும் துஷ்பிரயோகம் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். காயம் அடைந்த சிறுமியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த போலீசார், பின்னர் காப்பகத்தில் விட்டு சென்றனர்.

இந்த மாதத்தில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web