பகீர்.. ஸ்கூட்டரில் வெடிகுண்டு வைத்து ரஷ்ய ராணுவ தளபதி படுகொலை!

 
கிரில்லோ

ரஷ்யாவின் அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் செவ்வாய்கிழமை அதிகாலை மாஸ்கோவில் உள்ள அவரது அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.


கிரில்லோவின் உதவியாளரும் குண்டுவெடிப்பில் இறந்தார். ஸ்கூட்டரில் வெடிகுண்டு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய புலனாய்வாளர்கள் இரு மரணங்கள் குறித்தும் ஒரு வழக்கைத் திறந்துள்ளனர் என்று குழுவின் செய்தித் தொடர்பாளர் ஸ்வெட்லானா பெட்ரென்கோ கூறினார்.

ரஷ்யாவின் முக்கிய புலனாய்வுக் குழு, "இரண்டு படைவீரர்களைக் கொன்ற குற்றவியல் வழக்கைத் தொடங்கியுள்ளது" என்று கூறியது. "விசாரணையாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டு சேவைகள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்," என்று அது கூறியது. பிப்ரவரி 2022 இல் தொடங்கிய உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையின் போது உக்ரைனில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக பிரிட்டன் அக்டோபரில் கிரில்லோவ் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web