கொடூரம்... கணவனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மனைவி!

 
சாதனா

தனது கணவனைக் கொலைச் செய்வதற்காக கூலிப் படையை ஏவி அதிர வைத்திருக்கிறார் மனைவி ஒருவர். இவரது திட்டத்திற்கு சகோதரர்களும் உ தவி இருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் வசித்து வருபவர்  ராஜீவ். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2009ல் சாதனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகள்.  ராஜீவின் பூர்வீக கிராமத்தில் அவருக்கு சொந்த வீடு இருந்தாலும், அவரது மனைவி சாதனா கிராமத்தில் வசிக்க விரும்பாததால் நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். 

சாதனாவுக்கும், ராஜீவுக்கும் இடையே சில பிரச்சினைகள் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சாதனா தனது கணவரை கொலை செய்வதற்காக   தனது சகோதரர்கள் 5 பேரிடம் இது குறித்து பேசியுள்ளார்.  

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

திட்டமிட்டபடி கொலையை அரங்கேற்ற கூலிப்படையை ஏவியுள்ளார். இதன்படி  ஜூலை 21ம் தேதி இரவு சாதனாவின் சகோதரர்கள் மற்றும் கூலிப்படையினர் என மொத்தம் 11 பேர் ராஜீவின் வீட்டிற்குள் நுழைந்து அவரை சராமாரியாக தாக்கினர்.  இந்த தாக்குதலில் ராஜீவின் ஒரு கை மற்றும் 2 கால்களும் முறிந்தன. வலியால் கதறிய ராஜீவை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று உயிருடன் புதைத்து விட முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ராஜீவை சி.பி.கஞ்ச் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று, அவரை புதைப்பதற்காக குழியை தோண்டத் தொடங்கினர்.  அந்த சமயத்தில்  அந்த பகுதி வழியாக திடீரென ஒரு நபர் வந்துள்ளார்.

உத்தரபிரதேச போலீஸ்

அந்த நபரை பார்த்ததும், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் 11 பேரும் தங்கள் கொலை திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.  அந்த நபர், அடிபட்டு கிடந்த ராஜீவை பார்த்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில்  ராஜீவ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜீவின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?