என் சாவுக்கு மாநில அரசு தான் காரணம்... கடிதம் எழுதி விவசாயி தற்கொலை....!!

 
விவசாயி

இந்தியா முழுவதும் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கேரள மாநிலம்  ஆலப்புழா அருகே தகழியில் கடன் தொல்லை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவலால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தகழி பகுதியில் வசித்து வருபவர் பிரசாத்.  இவர் வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்தார்.

விஷம்

 அரசுக்கு நெல் கொடுத்ததின் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி இருந்தது. ஆனால் பல வருடங்களாக இந்தப் பணம் இவருக்கு கிடைக்கவே இல்லை. இதனால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் விஷம் குடித்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய தற்கொலைக்கு கேரள அரசு தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆம்புலன்ஸ்
கடன் தொல்லை காரணமாக விவசாயி பிரசாத் தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உட்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இதுகுறித்து கேரள கவர்னர்  விடுத்த செய்திக்குறிப்பில் “ கேரள அரசு வீண் ஆடம்பர செலவில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களும் நிறைவேற்ற யோசிப்பதே இல்லை.  விவசாயியின் தற்கொலைக்கு கேரள அரசின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறியுள்ளார். அத்துடன்  கவர்னர் ஆரிப் முகம்மது கான் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விவசாயி பிரசாத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web