அதிர்ச்சி... வாக்குப்பெட்டி பாதுகாப்பு பணி முடிந்ததும் ஆயுதப்படை காவலர் தற்கொலை!

 
சிவசங்கரன்

ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் சிவசங்கரன் (30). இவர் சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடியில் வாக்கு பெட்டி பாதுகாப்பு பணியில் சிவசங்கரன் இருந்தார். பின்னர், வேலை முடிந்து நேற்று காலை வீடு திரும்பினார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, சிவசங்கரன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் லிங்க பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொலை

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிவசங்கரன் சிவகங்கை வ.உ.சி தெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரது மனைவி லட்சுமி பிரியா தற்போது மதுரையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருவதும், சிவசங்கரனுக்கு குடும்ப பிரச்சனை இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web