பிரபல நடிகரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!! அதிரடி காட்டும் காவல்துறை!!

 
ஆருத்ரா

தமிழகத்தில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு  25 முதல் 30 சதவீதம் வரை வட்டி என கவர்ச்சிகரமான விளம்பரங்களால் மக்களை ஏமாற்றி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முதலீடு செய்த பொதுமக்கள் பலர் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆருத்ரா

தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல  தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ஆர்.கே. சுரேஷுக்கு  இந்த மோசடியில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே. சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் சம்மன் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் நேரில் ஆஜராகவில்லை. தலைமறைவாகிவிட்டார்.  இதையடுத்து நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா
இந்நிலையில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதும்  நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கி கணக்கை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியது.   இதன் மூலம் தற்போது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில்  சுரேஷை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web