பிரபல நடிகை கைது.... திரையுலகில் பெரும் பரபரப்பு!
இந்திய நடிகை நந்தினி காஷ்யப் இன்று கௌகாத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நந்தினி ஓட்டி வந்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் 21 வயது மாணவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து ஜூலை 25 ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு கௌகாத்தியில் தக்கிங்காவ் பகுதியில் நடந்தது.நடிகை சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றது அருகிலுள்ள சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.

இந்த விபத்துக்குப் பிறகு, மாணவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக அவரது தலையில் பலத்த காயங்கள் மற்றும் இரு கால்களிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
