பிரபல மலையாள நடிகர் டி.பி.மாதவன் காலமானார்... திரையுலகினர் நேரில் அஞ்சலி!
பிரபல மலையாள நடிகர் டி.பி.மாதவன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88. கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை டி.பி.மாதவன் உயிரிழந்தார்.
1980கள் மற்றும் 1990களில் மலையாள சினிமாவில் ஒரு முக்கிய நபராக டி.பி.மாதவன் இருந்தார். 600 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள டி.பி.மாதவன் பல்துறை குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அபிமான நடிகராகவும் திகழ்ந்தார்.

அவரது பிற்காலங்களில் நினைவாற்றல் இழப்புடன் போராடியவர் பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் வசித்து வந்தார். தனது இறுதி நாட்களை அங்கு கழித்து வந்தார். ராமு கர்யாத் விருது மற்றும் பிரேம் நசீர் விருது போன்ற மதிப்புமிக்க பாராட்டுகளைப் பெற்ற அவர், சினிமாவுக்கான அவரது பங்களிப்புகளுக்காக தொடர்ந்து அங்கீகாரம் பெற்றார்.
டி.பி.மாதவன் ஹரித்வார் சென்றிருந்த போது, அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் நேரிட்டது. அங்கு அவர் மயங்கி விழுந்தபோது அவருக்கு அங்கிருந்த சன்யாசிகள் அவர் திருவனந்தபுரம் திரும்ப உதவினார்கள். இயக்குனர் பிரசாத் அவரை காந்தி பவனுக்கு அழைத்துச் சென்று சேர்த்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் சீரியல்களில் நடிக்கத் திரும்பினாலும், விரைவில் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டதால் அவரது நடிப்பு வாழ்க்கை முடிவுக்கு வந்தது. புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த டி.பி.மாதவன், பேராசிரியர் என்.பி.பிள்ளையின் மகன். சமூகவியலில் முதுகலைப் பட்டதாரியான மாதவன், திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு மும்பை மற்றும் கொல்கத்தாவில் வெற்றிகரமான விளம்பர நிறுவனங்களையும் நிர்வகித்து வந்தார்.
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) முதல் பொதுச் செயலாளராக பதவி வகித்திருந்த டி.பி.மாதவன், அந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
