ரசிகர்கள் ஏமாற்றம்!! சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி!! ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா?!

 
சென்னை சூப்பர் கிங்ஸ்

16வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. நேற்று  இரவு 7.30 மணிக்கு  நடைபெற்ற 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. . இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் விளையாடத் தொடங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. அதில், அதிகபட்சமாக சிவம் துபே 48 ரன்கள் குவித்தார் .  கான்வே 30 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 20 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்
 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய  கொல்கத்தா அணி சுழற்றி ஆடத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் குர்பாசில் குர்பாஸ் சாஹர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய வெங்கடேச ஐயரும் சாஹர் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் பிறகு  நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு அரைசதம் அடித்து விளாசித் தள்ளினர். இதில் ரிங்கு சிங் 54 ரன்கள் எடுத்திருந்தார்.  ராணா மற்றும் ரஸல் களத்தில் நிற்க, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57 ரன்களும், ரிங்கு சிங் 54 ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் தவறவிட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த தோல்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தாது. இருந்தபோதிலும் முதல் 2 இடங்களிலிருந்து பின்னடைவு தான். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கிறது இந்த  போட்டியில் வெற்றி பெற்று 17 புள்ளிகள் பெற்றால் மட்டுமே முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு . அதே நேரத்தில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் தங்களது அடுத்த போட்டியில் தோல்வியடைய  வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் தோல்வி அடைந்து விட்டாலும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது . இதுவே சென்னை ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலான விசயம் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web