ரசிகர்கள் அதிர்ச்சி... பாலியல் வழக்கில் பிரபல நடிகர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

 
ஜெயச்சந்திரன்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்கில் நடிகர் ஜெயச்சந்திரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் பேரில் நடிகர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து சிறுமியின் தாய் கசாபா போலீசில் புகார் செய்த நிலையில், நடிகர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

ஷேமீர் பாலக்காட்டை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் ஜெயச்சந்திரன் என்றாலும் பொள்ளாச்சியில் சில காலம் தங்கியிருந்தார். குடும்ப பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். 

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் உத்தரவின்படி போலீசார் குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்று அதன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web