ஐபிஎல் போட்டிகளில் விளையாடல... மேக்ஸ்வெல் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

 
மேக்ஸ்வெல்

 17 வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். இவர் தனது அதிரடி பேட்டிங் மற்றும் த ஸ்பின் பவுலிங்கால் எதிரிகளை துவம்சம் செய்து விடுஆர். இவர் நடப்பு போட்டியில்  ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும்படி அவர் விளையாடவில்லை. இதனால் பெங்களூரு அணி தொடர் தோல்விகளால் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இதனையடுத்து நேற்று ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல்  கட்டை விரல் காயம் காரணமாக விளையாடவில்லை என ரசிகர்கள் நினைத்தனர்.  

மேக்ஸ்வெல்

தனக்கு பிரேக் தேவைப்படுவதாக டு பிளெசிஸிடம் கேட்டதாக மேக்ஸ்வேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேக்ஸ்வெல் "நான் கடந்த போட்டி முடிந்தவுடன்  டு பிளெசியிடமும் பயிற்சியாளர்களிடமும்  எனக்கு பதில் வேறு வீரரை ஆடவையுங்கள்.  கடந்த காலத்திலும் இது போன்ற தருணங்கள் நிகழ்ந்துள்ளன.  தற்போது எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவேளை தேவை.  மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமானால் அதற்குள் நான் என் உடல் மற்றும் மன நிலையை திடப்படுத்திக் கொள்வேன்" எனக் கூறியுள்ளார்.  

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல் இப்படி கூறியிருப்பதால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் ஓய்வில் இருக்கப்போவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  35வயதான மேக்ஸ்வெல்லுக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகக் கூட இருக்கலாம் எனவும் கூறப்படுவதால்  அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web