பைக் மீது கார் மோதியதில் விவசாயி பலி..தீப்பிடித்து எரிந்த மற்றொரு கார்... மனைவி கண்முன்னே சோகம்!
அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மனைவி செல்வம்பாள். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் உறவினர் வளைக்காப்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். கடுங்காலி கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த காரை கடலூர் மாவட்டம் நெய்வேலி இசக்கிமுத்து ஓட்டி வந்தார். இந்த கோர விபத்தில் மனைவி கண் எதிரிலேயே ராமசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் இசக்கிமுத்து ஓட்டி வந்த காருக்கு பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஒரு காரில் வந்து கொண்டிருந்தார்.
முன்னால் நடந்த விபத்தால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் காரை வலது பக்கம் திருப்ப முயற்சித்தபோது அவருக்கு எதிரில் ஜெயங்கொண்டம் நோக்கி செந்துறையை சேர்ந்த அறிவொளியின் காரில் மோதி அறிவொளி ஓட்டி வந்த கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரில் இருந்தவர்கள் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அறிவொளி காரின் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!