நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்... ஒன்றரை வயது குழந்தை மீது காரை ஏற்றிக் கொன்ற தந்தை.!

 
சாயிஷா

 பெங்களூரு HSR லே அவுட்டில் ஏப்ரல் 21ம் தேதி ஒரு குடும்பம்  திருமணத்திற்கு காரில் சென்று விட்டு இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பியது.  அதில் காரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஒன்றரை வயது சாயிஷா ஜன்னத் காரைச்சுற்றி வந்து தந்தையின் வருகைக்காக  கார்க்கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள். குழந்தை தனக்காக பின்னாலேயே காத்திருந்ததை அறியாத தந்தை காரை இயக்கினார்.

இதனால் கார் குழந்தை மீது ஏறிவிட்டது. கதறல் சத்தம் கேட்டு காரை நிறுத்தி பார்த்தால் குழந்தை ரத்த சகதியில் இருந்தது. அள்ளிப்போட்டுக்க்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்பவர்களை பதற வைக்கிறது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web