மனைவிக்கு விரித்த வலையில் சிக்கிய மாமனார்.. மருமகன் அதிரடியாக கைது.. பகீர் பின்னணி!

 
ராஜா மனோகரன்

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா மனோகரன் (71). திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த மே 14ம் தேதி குளியலறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.இதை பார்த்த மூத்த மகள் மனோ ரம்யா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜா மனோகரின் மூத்த மகள் மனோ ரம்யாவுக்கும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரைச் சேர்ந்த ராஜகுமாருக்கும் (43) திருமண தகவல் மைய ஆப் மூலம் திருமணம் நடந்தது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜகுமார், மனைவியை கொல்ல திட்டமிட்டு கடந்த 14ம் தேதி தனது நண்பர் சரவணகுமாருடன் வீட்டின் பின்புறம் உள்ள சுவர் ஏறி குதித்து மனோ ரம்யாவை கொல்ல காத்திருந்தார்.

கொலை

 ஆனால் மனோ ரம்யா குளிக்க வராத நிலையில், அவரது தந்தை ராஜா மனோகரன் குளிக்க வந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ராஜகுமார், மாமனாரின் வாயில் துணியை வைத்து கழுத்தை அறுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜகுமார், சரவணக்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!