கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகல.... பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை... பெரும் பரபரப்பு!

 
புவனேஸ்வரி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரெட்டியூர் பகுதியில் வசித்து வருபவர்  சுதாகர். இவர் கொட்டாவூர் பகுதி முரளியின்  மகள் புவனேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஓராண்டு கூட ஆகவில்லை. இதில்  புவனேஸ்வரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100 எண் கால் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.   புவனேஸ்வரி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்  புவனேஸ்வரியின் உறவினர்கள் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுதாகர் வீட்டாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்


போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து பெண் காவலரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர  விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் புவனேஸ்வரிக்கும் அவரது கணவர் சுதாகருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதில்  புவனேஸ்வரியின் தந்தை முரளி தனது மகளை கொடுமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

ஆம்புலன்ஸ்
புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது கணவர் சுதாகர்  மனைவி இறந்ததாக தகவல் அறிந்ததும் கணவன் சுதாகர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் அங்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  திருமணம் ஆகி ஓராண்டு மட்டுமே  ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர்  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வாணியம்பாடி அருகே எஸ் பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே   பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web