நூதன மோசடி... தெரியாத நம்பர் அழைப்பில் பெண் குரலா?... எச்சரிக்கையா இருங்க!
![செல்போன்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/0e1a658ee2932f532c1d3d9d5c0e2b94.jpg)
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.அதற்கு ஏற்றபடி தினசரி புதுவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக சைபர்கிரைம் மோசடிகள் அதிகரித்து விட்டன. இந்நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் பெண்கள் முதலீடு மற்றும் ஓடிபி குறித்து பேசி மோசடி செய்து வருவது அதிகரித்து வருகின்றது.
இதுபோன்ற அழைப்புகளில் பேசுபவர்கள் உண்மையில் பலர் பெண்களே கிடையாது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. செயலியில் உள்ள வசதியை பயன்படுத்தி பெண்களைப் போல ஆண்களே பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனால் பெயர் தெரியாத எண்ணில் இருந்து பெண்கள் பேசினால் அதுவும் முதலீடுகள், ஓடிபி கேட்கும் போது மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!