பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு.. முதல்வர் அதிரடி உத்தரவு!!

 
ஸ்டாலின் பங்காரு அடிகளார்

பங்காரு அடிகளார் மறைந்த செய்தி குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் அவருக்கு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்திய செய்தியறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். சமூக புரட்சி செய்த பங்காரு அடிகளார் சேவைகளைப் போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும்” என அறிவித்துள்ளார்.  

பெண்களுக்கு மாதம் தோறும் வரும் மாதவிலக்கு என்பது  சிறுநீர், மலம் போன்று ஒரு கழிவுதான் என்றும் அது பாவம் இல்லை என்றும் கூறி, மாதவிடாய் காலத்திலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதித்தவர் பங்காரு அடிகளார்.  இவரது   ஆன்மீகச் சேவையைப் பாராட்டி   2019ல்   மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. பெண்களுக்கான சமூக புரட்சி தவிர, கல்வியிலும்  புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.  ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலம்  மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள்  நடத்தப்படுகின்றன.

பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட  நிறுவனர் பங்காரு அடிகளார். இவர் திடீரென மாரடைப்பு காரணமாக  இன்று காலமானார். அவருக்கு வயது 82. செங்கல்பட்டு மாவட்டம்  மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் . தீட்டே கிடையாது என கடவுள் வழிபாட்டில்  பெரும் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் . தசரா கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் அவர்  மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ள நிலையில்   அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தே  சிகிச்சை பெற்று வந்தார்.  இந்தத் தகவலால்  பாதுகாப்பு காரணமாக அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ல்  இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.  உலகம் முழுவதும் பங்காரு அடிகளாருக்கு தீவிர பக்தர்கள் உள்ளனர்.  

அரசாணை

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆன்மிக உலகில் பெண்களையும்  பங்கெடுக்க வைத்தவர் பங்காரு அடிகளார். இவரை பக்தர்கள், பெண்கள் அம்மா என அழைக்கின்றனர்.  பெண்களை மையப்படுத்தி  கட்டமைக்கப்பட்ட ஆதிபராசக்தி பீடம் .  இங்கு  நிதி வசூலிப்பதிலிருந்து அந்த நிதியை நிர்வாகம் செய்வது வரை  அனைவரும்   பெண்களே. குறிப்பாக  கோயில் கருவறைகளில் பெண்களும் பூஜை செய்யலாம் எனும் வழக்கத்தை தமிழகத்தில் பரவலாக்கியது  மேல்மருத்துவர் சித்தர் பீடம்தான்.


அதே நேரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி  மிகப் பெரிய சமயப் புரட்சியை நடத்தி காட்டினார். மிக உயர்சாதி மத குருக்கள் மட்டுமே தமிழகத்தில் பெரிய மத நிறுவனங்களை உருவாக்க முடியும் என்ற விதியை உடைத்தவர் பங்காரு அடிகளார்.  30 ஆண்டுகளுக்கு முன்னால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்மருவத்தூர்  மிகவும் பின்தங்கிய பகுதி. ஆனால், இன்று மேல்மருவத்தூரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பங்காருவின் சித்தர் பீடம் நிறைய முன்னேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web