இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து... 7 பேர் பலி!
Updated: Apr 19, 2024, 17:47 IST
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மாம்பாங் பிரபதன் ராயா தெருவில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பிரேம் கடையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெரியவர்களும், 2 குழந்தைகளும் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையில், இந்த தீ விபத்து தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 5பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
மரம், பெயின்ட், பெயிண்ட் தின்னர் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் 110 பணியாளர்களுடன் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From around the
web