2021க்கு பின் முதன்முறையாக இந்தியாவில் இருந்து சீனா சென்ற எண்ணெய் கப்பல்!

 
கப்பல் நிவாரண பொருட்கள் இலங்கை

இந்தியாவில் இருந்து 2021ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக எண்ணெய் கப்பல் சீனாவுக்கு சென்றுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக விதித்த தடைகள் காரணமாக இந்திய, ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாயரா நிறுவனத்தின் எண்ணெய் கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் இருந்து நயாரா நிறுவன எண்ணெய் கப்பல் சீனா புறப்பட்டது.

கப்பல் துறைமுகம் ஆஷிஷ் கச்சோலியா

மலேசியாவிற்கு செல்ல வேண்டிய கப்பல், பொருளாதார தடைகளால் சீனாவின் சூஷான் துறைமுகத்திற்கு செல்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து 5 லட்சம் பேரல் டீசல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. லடாக் எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா - சீனா உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்திய எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?