இராமநாதபுரம் : 24 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்!

 
மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 24 பேர் கடந்த மார்ச் 24ம் தேதி இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக 24 மீனவர்களை கைது செய்தனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியம்

அதுமட்டுமின்றி மீனவர்கள் பிடித்த மீன்கள், வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 24 பேரையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் அனுப்பினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் 24 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்ப தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மீனவர்களிடம் பாஸ்போர்ட், விசா இல்லாததால், 24 மீனவர்களுக்கும் இந்திய தூதரகம் அவசர சான்றிதழ் வழங்கியதுடன், மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப விமான டிக்கெட்டுக்கான ஏற்பாடுகளையும் செய்தது. சென்னை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரையும் தமிழக அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் மீனவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web