தமிழக மீனவர்கள் 5 பேர் கைது; படகுகள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்!
தூரத்தில் இருக்கின்ற பாகிஸ்தானிடம் வீரத்தைக் காட்டி வரும் நாம் தான், சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலங்கையிடம் சரணடைகிறோம் என்று மீனவர்கள் கொந்தளிக்கிறார்கள். தொடர்ந்து தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறி வருகின்றனர். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகபட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் வசித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழில் தான். அதிலும் குறிப்பாக வங்கக் கடலில் உள்ள பாக் நீரிணை பகுதியே அவர்களின் வாழ்வாதார தளமாக இருந்து வருகிறது.கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்களையும் சிறைபிடிப்புகளையும் தொடர்ந்து வருகின்றனர் .மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 26 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றுள்ளது இலங்கை கடற்படை.

இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 391 படகுகளில் மீன் துறை அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடிக்கும் பாக் நீரிணை பகுதியில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது விசைப்படகினை சிறை பிடித்துச் சென்றனர்.மேலும் அந்தப் படகில் மீன்பிடிக்கச் சென்ற படகின் உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மோபின், சைமன், சேகர், டெனிசன் ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர்.

கடந்த காலங்களில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் ஒன்று கூட விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக சிறை பிடிக்கப்படும் மீனவர்களை விசாரணைக்குப் பின் இலங்கை கடற்படையினர் ஒப்படைப்பர். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் பிடிபட்ட 26 மீனவர்கள் 3 வாய்தாக்கள் முடிந்தும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
