கள்ளக்காதலனுடன் உல்லாசம்... 8 மாத கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு!
கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக கள்ளக்காதல் வீட்டில் 8 மாத கர்ப்பிணி பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் குந்தப்பனஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் அனுஷா. இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே சண்டை நீடித்து வந்த நிலையில், கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பவன் என்ற வாலிபரை காதலித்து வந்த அனுஷா, அவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானார்.
இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுஷா பவனிடம் கெஞ்சி கேட்டார். ஆனால் பவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அனுஷா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பவன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் பவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!