12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை.!

 
மேட்டூர் அணை

சேலம் மாவட்டத்தில்  மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து  காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து (கபினி, கிருஷ்ணராஜசாகர்) உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

தற்போது, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,514 கன அடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 60,000 கன அடி வரை நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 2025 ம் ஆண்டில் 4 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறப்பு

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சம் கனஅடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் ஆற்றில் இறங்கவோ, மீன்பிடிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?