டிசிஎஸ் ஐ தொடர்ந்து மெட்டா, இன்டெல் நிறுவனங்களும் ஆட்குறைப்பு... கதறும் ஊழியர்கள்!

 
டிசிஎஸ்
 


 

 ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆயிரக்கணக்கான  ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், மாறிவரும் வணிகத் தேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின்  தேவைக்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் செயல்திறன் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுப்பதாகக் கூறினாலும், டாடா போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறனுள்ள ஊழியர்கள் கிடைக்காததால் பணிநீக்கங்கள் குறித்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2%, அதாவது சுமார் 12,261 ஊழியர்களைக் குறைக்க உள்ளது.


மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர, குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்  சுமார் 2,000 ஊழியர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க சுமார் 80 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிலையில், மறுசீரமைப்பு அவசியம் என தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். அதேபோல், இன்டெல்   சுமார் 24,000 பேரைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் தனது  ‘ரியாலிட்டி லேப்ஸ்’ பிரிவில் புதிய ஆட்குறைப்பைச் செய்துள்ளது.

பணிநீக்கம்
ஜப்பானிய தொழில்நுட்ப பானாசோனிக் நிறுவனம் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.  டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம்  குறித்து ஐடி அமைச்சகம் சார்பில் கூறுகையில்,’ டிசிஎஸ் நிறுவனத்தில் இது ஏன் நடக்கிறது என்பது குறித்து ஐடி அமைச்சகம் கவலை கொண்டுள்ளது. இந்த பணி நீக்கத்திற்கான அடிப்படை காரணத்தை புரிந்து கொள்வது அவசியம். வேலைவாய்ப்பு வளர்ச்சி ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. அதே நேரத்தில், திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் டிசிஎஸ் நிலைமையை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் டிசிஎஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.
 டிசிஎஸ்
பணி நீக்கம் குறித்து டிசிஎஸ் நிறுவனம்  எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பப் பகுதிகளில் முதலீடு செய்தல், புதிய சந்தைகளில் நுழைதல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குதல், எங்கள் பணியாளர் மாதிரியை மறுசீரமைப்பு செய்தல் உட்பட  பல முயற்சிகள் அடங்கும்.    பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு டிசிஎஸ் சார்பில் பொருத்தமான சலுகைகள், இடமாற்றம், ஆலோசனை மற்றும் ஆதரவு நிச்சயமாக வழங்கப்படும் எனக்  கூறப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?