தமிழகத்தில் முதன்முறையாக கேக் திருவிழா... அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

 
கேக் திருவிழா
தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்படும் கேக் திருவிழாவை தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலேயே முதன்முறையாக கேத் திருவிழாவை தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் நிறுவனம் நடத்துகிறது. 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏராளமான கேக் வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் நிறுவன நிர்வாக இயக்குனர் ரதிதேவி சண்முகம் விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். 

கேக்

ப்ளாக் ஃபாரஸ்ட் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சண்முகம் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கேக் திருவிழா கண்காட்சியை இன்று காலை தொடங்கி வைத்தார்.

இன்று டிசம்பர் 23ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை கேக் திருவிழா நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மெகா கேக் திருவிழாவில் 33 வருடம் கேக் தயாரிப்பில் அனுபவமிக்க செஃப் ஆக திகழும் சண்முகவடிவேல் மற்றும் குழுவினர் கை வண்ணத்தில் வித, விதமான கேக் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த கேக் வகைகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.

ப்ளம் கேக்

இந்த விழாவில் டைட்டானிக் ஷிப் கேக், கிறிஸ்துமஸ் கேக், வானவில் கேக், பார்பி கேர்ள் கேக், நெய் கேக், டோனட் கேக், சாக்கோ மச், சாக்கோ பிரபுள், ரிச் பிளம், புரூட் பிளம், டார்க் சாக்கோ மஞ்ச், கேஷில் பிரவுனி, கேரட் கேக், எக்லஸ் மின்ஸ், ராயல் ரிச் பிளம், வென்னிலா, ஸ்டாபெரி, பைன் ஆப்பிள், பட்டர் ஸ்கிராச், பிளாக் கரன்ட், பேபி பாஸ் கேக் உட்பட ஏராளமான கேக் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web