முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு... முழு வீடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை!
சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் முகம் சுளிக்கும் வகையில் பொதுமேடையில் ஆபாசாமாக முன்னாள் அமைச்சா் பொன்முடி பேசியது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அருவருக்கத்தக்க வகையில் பொன்முடி பேசிய முழு வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பொன்முடி ஆபாசமாக பேசிய முழு வீடியோ பதிவு ஆதாரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது. முழு வீடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு விசாரணை நடத்தப்படும் என நீதிபதி சதீஷ்குமார் விசாரணையை ஒத்தி வைத்தார்.

திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையான நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த நிலையில் அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாா்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாா்களை போலீசா முடித்து வைத்து விட்டனா் எனத் தெரிவித்து அது தொடா்பான அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதைப் படித்துப் பாா்த்த நீதிபதி, புகாா்களில் முகாந்திரம் இல்லை என்று போலீசா எப்படி முடிவுக்கு வந்தனா்? இந்த வழக்கில் புகாா்களை முடித்து வைத்த போலீசா பிற புகாா்களில் வேகம் காட்டுவாா்களா? என்று கேள்வி எழுப்பினாா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா், பொன்முடி பேசிய கருத்துகள் அவருடைய சொந்த கருத்துகள் இல்லை.
1972ம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசிய கருத்துகளைக் கூறியுள்ளாா். எனவே இந்தப் புகாா்களை போலீசார் முடித்து வைத்ததை எதிா்த்து புகாா்தாரா்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் பொன்முடி பேசிய முழு வீடியோ பதிவையும், 1972ம் ஆண்டில் சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
