முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் . இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். வி.எஸ். அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. 101 வயதான அச்சுதானந்தன் ஜூன் 23ம் தேதி மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூத்த தலைவர் அச்சுதானந்தனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் உள்ளதே தவிர அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவச் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
ஏற்கனவே அவரது சிறுநீரக செயல்பாடு மோசமாகி இருப்பதாகவும் ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்குச் செயற்கை சுவாசம் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அச்சுதானந்தன் சமூக நீதி மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் வாதிட்டவர். 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணிபுரிந்தவர். சமீப காலமாக உடல் நலக்குறைபாடு காரணமாக பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!