சபரிமலை தங்க அபகரிப்பு வழக்கில் தேவஸ்தான முன்னாள் தலைவர் வாசு கைது!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் அபகரிக்கப்பட்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, செயல் அதிகாரி சுதீஷ் குமார், திருவாபரண கமிஷனர் எஸ். பைஜு ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தங்க அபகரிப்பு நடந்த காலத்தில் தேவஸ்தான தலைவராகவும், கமிஷனராகவும் இருந்த என். வாசுவையும் நேற்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கைது செய்தனர். இதனால், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
