அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை! ராகுல் காந்தி ஆறுதல்!
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஓஹரவ பவானி பகுதியில் வசித்து வருபவர் சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவரையும், இவரது மனைவி பவானி (28) மற்றும் இவர்களது 5 மற்றும் 2 வயதுடைய இரு மகள்களையும் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று அக்டோபர் 4ம் தேதி மாலை இந்த கொடூர படுகொலை சம்பவத்தில் சந்தன் வர்மா என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் சுனில் குமாரின் மனைவி ரேபரேலி காவல் நிலையத்தில் ஏற்கெனவே சந்தன் வர்மா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார் அளித்திருந்த நிலையில், சந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில், தங்களது குடும்பத்தினருக்கு உயிரிழப்போ வேறு ஏதேனும் நிகழ்ந்தாலோ அதற்கு சந்தன் தான் முழு பொறுப்பாவார். அவர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று பவானி குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், சுனில் குமாரின் வீட்டிற்குள் கதவை உடைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கதவைத் தட்டி இருக்கிறார்கள். சுனில்குமார் திறந்ததும் அவரையும், அவரது குடும்பத்தினரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து விசாரணை நடத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். அமேதி காங்கிரஸ் எம்.பி. கிஷோரி லால் ஷர்மா இன்று சுனில் குமாரின் தந்தையை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், சுனில் குமாரின் தந்தையை ராகுல்காந்தியுடன் போனில் பேசச் செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய கிஷோரி லால் ஷர்மா 'இது ஒரு கொடூரமான கொலை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்குமாறு ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில், நான் நேற்று முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன்' என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
