ஒடிசா விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி!! அதானி சேவாக் அதிரடி!!

 
அதானிசேவாக்

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை வழங்குவதாக தொழிலதிபர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மிக மோசமான, கவலையளிக்கும் ரயில் விபத்தாக ஒடிசா சம்பவம் அமைந்துள்ளது.   ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியை அதானி குழுமம் கவனித்துக் கொள்ளும். மேலும் இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதும் நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும் என  கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் இந்த துயரமான நேரத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்தது.. சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் நான் அத்தகைய குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன்  எனத் தெரிவித்துள்ளார். 

ஒடிசா

ஜூன் 2ம் தேதி மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டன. இந்த கோர விபத்தில்  275 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பாலசோர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என  பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். இதன் அடிப்படையில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில்  சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.  இதற்காக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள்  மற்றும் தலைநகரில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளில் இருந்து முன்னணி மருத்துவ  நிபுணர்கள்  இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம்  புவனேஸ்வர்  அழைத்து செல்லப்பட்டனர்.  அவர்களுடன் நவீன மருத்துவ தளவாடங்கள், அவசர சிகிச்சை பிரிவு உபகரணங்களும் எடுத்து செல்லப்பட்டன. ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கு பின் சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து ரயில் பாதைகளை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  

ஒடிசா விபத்து
விபத்து நடந்து 51 மணி நேரத்திற்குள்  விபத்து நடந்த தண்டவாளம் வழியாக  சோதனை முறையில்  சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது.  விபத்து நடந்த நேரம் முதல் அப்பகுதியிலேயே தங்கி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் சேவை தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார். இந்நிலையில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரயில் சேவை துவங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை 90 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக விபத்து நடந்த பாலசோர் பகுதி வழியாக 10.45 மணிக்கு முதல் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை செண்ட்ரலில் இருந்து இரவு 7.20க்கு ஹவுரா அதிவிரைவு மெயில் ரயில் ரத்து செய்யப்படுகிறது.  இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 123 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web