ஜூன் 2 முதல் வெயில் படிப்படியாக குறையத் தொடங்கும்... வெதர்மேன்.!

 
வெதர்மேன் வெயில்

 அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மேலும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஜூன் 1ம் தேதியில்  இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் 2 நாட்களுக்கு  முன்பாகவே பருவமழை தொடங்கிவிடுவதாக   வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  

வெதர்மேன்

கேரளாவில் ஏற்கனவே கடந்த 2  வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம் இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம்,  பத்தனம் திட்டா , ஆலப்புழா , கோட்டயம் மற்றும் எர்ணாகுளம்  மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . 
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர்,  செங்கல்பட்டு  மாவட்டங்களில் ஜூன் 2ம் தேதி முதல் வெப்பம் குறையத் தொடங்கும் என  பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  வட தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!