விருப்பமான பாடப்பிரிவு கிடைக்காததால் விரக்தி.. பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுக்கா திருவலம் அருகே உள்ள கர்ணம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சம்பத். இவரது மகன் சர்வேஷ் (வயது 15), காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 331 மதிப்பெண்கள் பெற்றார்.
அப்போது அதே பள்ளியில் 11ம் வகுப்பில் சேர விரும்பும் பாடத்தை கேட்டுள்ளார். ஆனால் மதிப்பெண் குறைவாக இருந்ததால் மாணவன் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் சர்வேஷ் மனமுடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை பெற்றோர் விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சர்வேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து, பெற்றோர், நிலத்தில் இருந்து வந்து, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பதை பார்த்து, மகனை அழைத்தனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி சர்வேஷ் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சர்வேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவலம் காவல் நிலையத்தில் சம்பத் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடம்பப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விரும்பிய பாடம் கிடைக்காததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
