திருச்செந்தூரில் கடல் அரிப்பு மேலும் அதிகரிப்பு... பக்தர்கள் அவதி!!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மார்கழி மாதத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் திருச்செந்தூருக்கு வந்து வழிபடுவதால் கூட்டம் அலைமோதுகிறது.
திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் புனித நீராடும் பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
இந்நிலையில் தற்போது மேலும் கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாஅங்கு கரடுமுரடான வெண்ணிற பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே அப்பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
பாறைகளில் நின்று புனித நீராடுவதால் பக்தர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனினும் சிலர் ஆபத்தை உணராமல் பாறைகளில் நின்று செல்பி எடுக்கின்றனர். சிறுவர்கள் ஓடி விளையாடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவில் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!