வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தது ‘ககன்யான்’! இஸ்ரோ சாதனை!

 
ககன்யான்

ககன்யான் விண்ணில் சீறிப் பாய உள்ள நிலையில், சில நொடிகளுக்கு முன்பாக திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட ககன்யான், 10.15 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சரித்திரத்தில் இந்தியாவின் பெயரை உலக அரங்கில் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக எழுதி சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இன்று காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ககன்யான், வானிலை காரணமாக கொஞ்சம் தாமதமாக 8.30 மணிக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் சோதனை ராக்கெட் இன்று காலை 7.30 மணிக்கு ஏவப்படுவதற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு நேற்று காலை கவுண்டவுன் துவங்கியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், 8.30 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. 

ககன்யான்

இத்திட்டத்தின் படி மனித குழுவினரை விண்ணில் 400 கிமீ சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பி வைத்து, அவர்களை பத்திரமாக பூமிக்கு திருப்பி அழைத்து வரப்படுவர். பணியின் மூலம், மனித விண்வெளி பயண திறனை வெளிப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டு, இன்று அக்டோபர் 21ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவ தயார் நிலையில் வைக்கப்பட்டது. 

டிவி-டி1 ராக்கெட் மூலம், ‘குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்’ என அழைக்கப்படும் விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒரே ஒரு உந்து சக்தி கொண்ட திரவ எரிபொருள் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து சுமார் 35 கிமீ உயரம் வரை விண்ணுக்கு செல்லும் சக்தி படைத்தது.

இதில் சோதனைகளுக்காக சிஎம்.பேரிங் மற்றும் இன்டர்பேஸ் அடாப்டர்களுடன் குரு மாட்யூல் மற்றும் குரு எஸ்கேப் சிஸ்டம்களுடன்  வேகமாக செயல்படும் திட மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன.  விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதி’ ராக்கெட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கிமீ உயரத்தில் சென்றவுடன் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து விடும். 

ககன்யான்
இதனை பாராசூட்டுகள் சுமந்து வந்து வங்கக்கடலில் பத்திரமாக தரை இறக்கப்படும். இந்த சோதனையில் வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக திட்டமிட்ட இலக்கு வரை சென்று மீண்டும் சேதமடையாமல் கடலில் தரை இறங்குகிறதா என பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் விழுந்தவுடன் இதனை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு மீண்டும் இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். 

ராக்கெட் ஏவப்படுவதை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள  பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் காண ஆர்வம் உள்ளவர்கள் https://lvg.shar.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதள முகவரியில் பெயர் உட்பட பல தகவல்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். நேரில் செல்ல முடியாதவர்கள், இந்த செய்தியின் ட்விட்டரில் உள்ள வீடியோ லிங்க்கை க்ளிக் செய்து காணலாம்.  இந்நிலையில், திடீரென இந்த பணி மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. மற்றொரு நாளில் சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலை, அதன் பின்னர் வானிலை சீரான நிலையில், 10.15 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web