உஷார்... விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்... இதற்கெல்லாம் தடை... தெரிஞ்சுக்கோங்க!
விநாயகரின் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில், உள்ளூரில் கெத்து காட்ட நினைக்கும் இளைஞர்களே, பக்தி பரவசத்தில் கடலிலோ, ஆறுகளிலோ விநாயகர் சிலைகளைக் கரைத்து, அதன் மீது ஏறி நின்று நர்த்தனமாடும் பக்தர்களே... உங்கள் கொண்டாடங்கள் அடுத்தவரை பாதிக்கக்கூடாது, கடவுளையும் அவமதிக்க கூடாது, யாருக்கும் இடைஞ்சலாகவும் இருக்க கூடாது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிஞ்சுக்கோங்க. தேவையில்லாம சர்ச்சையிலும், சங்கடத்திலும் சிக்கிக்காதீங்க.

அதன்படி, பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது. சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

அனுமதியில்லாத இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
